இடுகைகள்

ஜூன், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இசையும் இறைவனும் ஒன்றே

படம்
இறைவன் உலகை படைத்தான் அதில் உயிர்களை படைத்தான் அந்த உயிர்களுக்கு உணர்வுகளை கொடுத்தான் குறிப்பாக உலகில் உள்ள அனைத்து மனித குலத்திற்கும் சோகம், சந்தோஷம், பக்தி, விரக்தி, கோபம், காதல், போன்ற உணர்வுகளை கொடுத்தான். இந்த உணர்வுகளை நாடு, மொழி, இன, வேறுபாடின்றி அனைவருக்கும் கொடுத்தான் இறைவன். அதேபோல இசையானது வேகம் குறைவான இசை சோக உணர்வை வெளிப்படுத்தும் வேகமான இசை சந்தோஷமான ஒரு உணர்வைத் தரும். இப்படித்தான் இந்த இசையானது நாடு, மொழி, இன, வேறுபாடு இன்றி அனைவருக்கும் உணர்ச்சியைத் தரும். எப்படி இந்த மனித உணர்வுகளும், சங்கீத உணர்வுகளும் உலகம் முழுவதும் ஒரே போல இருக்கவேண்டும் என்று யார் சொல்லித் தந்தது. ஆகவே உணர்வுகளைப் படைத்த இறைவன் மனித குலத்திற்கு இசையையும் கொடுத்து உள்ளான். ஆகவே இசை இறைவன் இரண்டும் வேறல்ல இரண்டும் ஒன்றே. அன்பு என்ற உணர்வு இறைவன் என்றால் இனிமையான இசையும் ஒரு இறைவனே. ஆகையால்தான் இறைவனை வழிபடும் பொழுது நல்ல ஒரு இனிமையான சங்கீதத்தின் துணையோடு இறைவனை நாம் வழிபடுகின்றோம். ஒரு நல்ல நறுமணத்தை நாம் நுகரும் பொழுது நமது மனம் அதில் மயங்கும். ஒரு துர்மணத்தை நா

தெய்வீகக் கலைகள்

படம்
மனிதன் தன்னுடைய வாழ்க்கைக்கு உறுதுணை செய்யும் பல வகையான தொழில்களை நாம் கலைகள் என்று கூறுகின்றோம்.  ஆகவே கலைகள் என்பது நமது உள்ளத்தில் உணர்வுகளை எழுப்பி இன்பம், மனநிறைவு, கற்பனைவளம், போன்றவற்றை தருகின்றது. ஆய கலைகள் 64 என்பர். கலைகளின் தன்மையைப் பொறுத்து சிலவற்றை லலித கலைகள் என்றும் மற்றவை பொதுவான கலைகள் என்றும் தொகுத்துள்ளனர்.  இவற்றில் மிக முக்கியமானதாக சில கலைகளை மட்டும் கவின் கலைகள், நுண்கலைகள், இன் கலைகள், நன் கலைகள் என்று பெருமை படுத்துகின்றோம்.  இவை சங்கீதம், கவிதை, ஓவியம், சித்திரம், சிற்பம் ஆகிய ஐந்து கலைகள் ஆகும். கண்களின் வழியாக கருத்தினில் புகுந்து மனதை மகிழ்விப்பது கவின் கலைகள் ஆகும். இவை சிற்பம், கட்டடக்கலை, சித்திரம்,) ஓவியம்  ஆகியனவாகும். நுண்கலை என்பது செவி யினால் கேட்டு மனதிற்கு இன்பம் தருபவை ஆகும். இவை இசை, கருவிஇசை, நடனம் போன்றவைகளாகும். மற்ற கலைகள் அனைத்தும் உருவாக்கி முடித்த பின்னர்தான் பிறரால் கண்டும் பிறர் சொல்லக் கேட்டும் மகிழத்தக்க கலைகளாகும். ஆனால் இசைக் கலையும் நடனக் கலையும் அவை நிகழும் பொழுதே அதை நிகழ்த்துபவருக்கும்  ரசிப்போர்க்கும்

நீலமணி இராக வர்ணம் குருநாதர் கையெழுத்தில்

படம்

நாதஸ்வரம் ஒரு பொக்கிஷம்

படம்
"நாதஸ்வரம்' என்ற வட மொழிச் சொல்லினால் நாம் வழங்கும் தமிழருக்கே உரித்தான சிறப்பான இசைக் கருவி"வங்கியம்'என்று பழங்காலத்தில் வழங்கப்பட்டது.சிலப்பதிகாரத்தில் அரங்கேற்றக் கதையில் இளங்கோவடிகள் குறிப்பிடும் வங்கியம் நாதஸ்வரமே என உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் விளக்குகிறார்.தமிழ்நாட்டில் இலங்கையில்,தமிழர் கலாசாரத்தில் மிகவும் புகழ் பெற்ற இசைக் கருவியாக விளங்குவது நாதஸ்வர இசைக்கருவியாகும்.தமிழக மக்கள் பெருமையோடு சொந்தம் பாராட்டுகிற வாத்தியமான நாகஸ்வரம் திருவிழாக்களிலும்,திருமண வைபவங்களிலும், திருக்கோயில் வழிபாடுகளிலும், இறைவனின் திருவீதியுலாக்களிலும்,உறுமி மேளம்,நையாண்டி மேளம் போன்ற கிராமிய இசை நிகழ்ச்சிகளிலும் மிகவும் சிறப்பாக இசைக்கப்படுகிறது. இது 'இராஜவாத்தியம்' என்றும், 'மங்களகரமான வாத்தியம்' என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழர்கள் கொண்டாடும் விழாக்கள் யாவற்றிலும் நாகஸ்வர இசையைக் கேட்கலாம். நாதசுவரம் துளைக்கருவி வகையைச் சேர்ந்த ஓர் இசைக் கருவியாகும். இது  நாதஸ்வரம், நாதசுரம், நாகசுரம், நாகஸ்வரம், நாயனம் என்று பலவாறு அழைக்கப்படுவது உண