சீர்காழி முத்துத்தாண்டவர்
சீர்காழி முத்துத்தாண்டவர் சீர்காழி முத்துத்தாண்டவர் வாழ்க்கை வரலாறு தமிழ்நாட்டில் இன்றைய கீர்த்தனம் - கிருதி மரபுக்குத் தந்தை என்று சொல்லத்தக்கவர் சீர்காழி முத்துத்தாண்டவர். சிதம்பரம் நடராசப் பெருமாள் மீது அளவில்லாத கீர்த்தனங்களும் பதங்களும் பாடியவர். இவர் பாடல்களை இந்த இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை சங்கீத வித்துவாள்கள் தங்கள் கச்சேரிகளில் நிரம்பப் பாடிவந்தார்கள். அக்காலத்தில் இவருடைய பதங்கள் அபிநயத்துக்கு மிகவும் சிறப்புடையனவாய்க் கருதப்பட்டன. தற்காலத்திலும் முத்துத்தாண்டவரின் பதங்கள் நாட்டிய நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முத்துத்தாண்டவர், சோழ நாட்டில் சீர்காழி என்ற சிவத்தலத்தில் பிறந்தார். இத்தலம் சைவ சமய ஆசாரியராகிய திருஞானசம்பந்தர் அவதாரம் செய்து அம்பிகையிடம் ஞானப்பாலுண்ட அற்புதம் பொருந்தியது. இங்கு, சுவாமி பெயர் திருத்தோணியப்பர். அம்பிகை - திருநிலைநாயகி. (யுக முடிவுக்காலத்தில் பெரு வெள்ளம் உண்டாகி அதில் உலகம் யாவும் மூழ்கியபோது, சிவபெருமான் இங்கு ஒரு தோணியில் உயிர்களை ஏற்றி மிதக்கச் செய்து காத்தமையால் இத்தலம் தோணிபுர
கருத்துகள்
கருத்துரையிடுக